RSS Feed Widget
/**

வெங்கட்பிரபு-வுடன் இணையும் கார்த்தி


சென்னை 600 028, சரோஜா, கோவா, மங்கத்தா ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய வெங்கட் பிரபு, ‘மங்காத்தா’ படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளி விட்டுள்ளார்.
இந்நிலையில் சூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் சூர்யா தற்போது சிங்கம் படத்தின் 2-ம் பாகத்தில் நடிப்பதற்காக சென்றுவிட்டதால் அந்த வாய்ப்பு அவரது தம்பி கார்த்தி-க்கு வந்துள்ளது.
ஆம், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, வெளிநாடுகளில் பயணம் மேற்கொண்டு ஒரு கதையை உருவாக்கி வந்துள்ளாராம் இயக்குநர் வெங்கட் பிரபு. விரைவில் படப்பிடிப்பு வேலைகள் துவங்கவிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்தி-யின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘சகுனி’ படம், படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
**/